search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஏ.எஸ். அதிகாரி"

    துருக்கி நாட்டில் இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ShashankGoel
    புதுடெல்லி:

    இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாசங் கோயல். இவர் அம்மாநிலத்தின் தொழிலாளர் துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுபம் கோயல் அமெரிக்காவில் தங்கி அங்கு உள்ள பெடரல் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த சுபம் தனது நண்பருடன் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் சென்றார். விடுமுறைக்கு பின் கலிபோர்னியாவிற்கு செல்ல இருந்தார்.

    இந்நிலையில், சுபம் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது நண்பர்கள் பணத்தை கொடுத்துவிட்டனர். ஆனால் சுபம் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுபம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சுபத்தின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தந்தை இந்திய வெளியுறவுத்துறையின் உதவியுடன் சுபத்தின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் துருக்கியில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ShashankGoel
    ×